பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வந்த, கேரள மாநிலம், திருவாங்கூர் சமஸ்தான அரச குடும்பத்தை சேர்ந்த அசுவதி கவுரி லட்சுமி பாய், சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில், சிறப்பான வரவேற்று அளிக்கப்பட்டது.
அப்போது, நகர்மன்ற தலைவர் சிந்துாரி, கோவில் ஆணையர் சுவாமிநாதன், கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாரண வீரன், இன்ஸ்பெக்டர் தாமோதரன் ஆகியோர் உடனிருந்தனர்.