ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த கோவிலில் பங்குனி திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் திருவிழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக குண்டம் இறங்கி வருகின்றனர்.