கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உத்தரவு ஆணை

59பார்த்தது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.

அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் தலைமை வகித்தார்.

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பர்கூர், எண்ணமங்கலம், சங்கராபாளையம் , கெட்டிசமுத்திரம், மைக்கேல்பாளையம்,
பச்சாம்பாளையம், குப்பாண்டம்பாளையம் , நகலூர் , கூத்தம்பூண்டி கீழ்வானி, சின்னத்தம்பிபாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் வசிக்கும், 119 பயனாளிகளுக்கு, 3. 50 லட்சம் மதிப்பில், முதல் கட்டமாக உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி