பக்ரீத்ஒட்டி அதிமுக சார்பில் இஸ்லாமியர்களுக்கு10 கிலோஅரிசி

63பார்த்தது
ஈரோட்டில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிமுக சார்பில் 300 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு 10 கிலோ அடங்கிய அரிசி பைகளை பெரியார் நகர் பகுதி கழக செயலாளர் மனோகரன் வழங்கினார்.
நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகையானது இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட  பெரியார் நகர் பகுதி கழகத்தின் சார்பில் பெரியார்  நகரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இஸ்லாமிய மக்களுக்கு உதவிடும் வகையில் 10 அரிசி பைகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியார் நகர் பகுதி கழக செயலாளரும் முன்னாள் மண்டல தலைவருமான மனோகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு தேவையான அரிசி பைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி