மின்கட்டண உயர்வுக்கு ஈபிஎஸ் காரணம் - அமைச்சர் குற்றச்சாட்டு

64பார்த்தது
மின்கட்டண உயர்வுக்கு ஈபிஎஸ் காரணம் - அமைச்சர் குற்றச்சாட்டு
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் இன்று (ஜூலை 23) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக நடத்திய போராட்டம் குறித்து பேசிய அவர், “எடப்பாடி பழனிச்சாமி உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதுதான் மின் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணம். ஜெயலலிதா ஏற்க மறுத்த திட்டத்தில் கையெழுத்திட்டவர் எடப்பாடி. பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போல் இருக்கிறது அதிமுகவின் செயல்” என விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி