சாட்டை துரைமுருகன் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்

75பார்த்தது
சாட்டை துரைமுருகன் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்
நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் இன்று கைது செய்யப்பட்டார். அதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில், ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், சாட்டை துரைமுருகன் மீது பொய் வழக்கு புனைந்து இந்த அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி