பிரபல மார்க்கெட்டிங் நிறுவனமான ஹிந்துஸ்தான் பவர்லிங்க் ஊழியர்கள் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தங்களது இலக்குகளை முடிக்க தவறிய ஊழியர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியுள்ளனர். கழுத்தில் பெல்ட்டை கட்டி நாய் போல் நடக்க வைத்து தட்டில் தண்ணீர் ஊற்றி நாக்கால் குடிக்கச் சொல்லியுள்ளனர். இருவரின் பேன்ட்டை கழற்றி ஒருவர் ஆணுறுப்பை மற்றொருவர் பிடித்துக்கொள்ளும்படி கொடூர டார்ச்சர் கொடுத்துள்ளனர்.