தேர்தல் விதிகள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

80பார்த்தது
தேர்தல் விதிகள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பணபலம், ஆள்பலம், வதந்திகள், விதிமீறல் ஆகியவை தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக உள்ளன. வங்கி வாகனங்கள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பணத்தை எடுத்துச் செல்லக் கூடாது. ATM-களில் மாலை 6 மணிக்கு மேல் பணத்தை நிரப்பக் கூடாது. சட்டவிரோதம் மற்றும் சந்தேகத்திற்கு இடமான ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். சமூக வலைதளங்களில் கருத்து கூற உரிமை உள்ளது. ஆனால், பொய் செய்தி பரப்பாதீர். தவறான செய்திகளை நீக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி