ஈழத்தில் எல்லாளன் ஆவணப்பட படப்பிடிப்பின் போது துப்பாக்கிகளை வைத்திருப்பது போல எடுக்கப்பட்ட போட்டோக்களை தாம் ஆயுதப் பயிற்சி எடுத்த போது எடுத்த படங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக ஈழப் புகைப்படக் கலைஞர் அமரதாஸ் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து சீமான் புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவித்தார்.