ஈகோ பிரச்சனை? தோனியை விமர்சிக்கும் ஆர்சிபி ரசிகர்கள்

565பார்த்தது
நேற்றைய சிஎஸ்கே - ஆர்சிபி ஆட்டம் முடிந்த பின்னர் எதிரணி வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டு தோனி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆர்சிபி வீரர்கள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வரும்பொழுது, அவர்களுடன் கை குலுக்குவதற்காக சிஎஸ்கே வீரர்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் மைதானத்தின் பாதி வரை வந்த தோனி, எதிரணி வீரர்களுக்கு கை கொடுக்காமல் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு திரும்பினார். இந்த வீடியோவை பகிர்ந்த ஆர்சிபி ரசிகர்கள், “தோனிக்கு ஈகோ பிரச்சனை” என கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி