போதைப் பொருள் வேட்டை - 55 பேர் கைது

70பார்த்தது
போதைப்  பொருள் வேட்டை - 55 பேர் கைது
தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் ''புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை''மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குழு கடந்த 7 நாட்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 55 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 220.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 3.1 கிலோ மாவா, பறிமுதல் செய்யப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி