காமராஜர் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் கல்வி, தொழில் வளம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்தார். இவரது ஆட்சி காலத்தில் சென்னை ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை, ஆவடி கனரக வாகன தொழிற்சாலை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், திருச்சி பாரத மின்மிகு நிறுவனம், மணலி சுத்திகரிப்பு நிலையம், நீலகிரி புகைப்பட சுருள் தொழிற்சாலை, கிண்டி இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள் தமிழகத்தில் நிறுவப்பட்டன.