ரேஷனில் மசூர் பருப்பு வினியோகம்? நீதிமன்றம் அதிரடி

121214பார்த்தது
ரேஷனில் மசூர் பருப்பு வினியோகம்? நீதிமன்றம் அதிரடி
சென்னையில் ஸ்ரீ சாய்ராம் இம்பெக்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் பொது வினியோக திட்டத்தில் மசூர் பருப்பை வினியோகிக்க அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பொது வினியோக திட்டத்தின் கீழ் மசூர் பருப்பையும் வினியோகிக்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்கும்படி, தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி