கள்ளச்சாராயத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

548பார்த்தது
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அதிமுக சார்பில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்பொழுது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டத்தை அறிவித்து கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அதிமுக சார்பில் திங்கட்கிழமை காலை 11. 30 மணியளவில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சர்ருமான திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிமுக துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்று கள்ளச்சாராயத்திற்கு எதிராக கண்டன உரையாற்றினார்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக தொண்டர்கள் பல்வேறு விதமான கண்டன கோஷங்களை எழுப்பினர். இன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி