பிரார்த்தனை முடிந்து வெளியே வருபவர்களிடம் வாக்கு சேகரிப்பு

564பார்த்தது
அதிமுக கூட்டணி கட்சி எஸ். டி. பி. ஐ வேட்பாளருக்கு முள்ளிப்பாடி கிறிஸ்தவ தேவாலயங்களில் பிரார்த்தனை முடிந்து வெளியே வருபவர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அதிமுக கூட்டணி கட்சி எஸ்டிபிஐயின் மாநில தலைவர் முகமது முபாரக் ஆதரித்து திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவின் பேரில், மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராஜசேகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் முள்ளிப்பாடியில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்து வெளியே வரக்கூடிய வாக்காளர்களாகிய பொதுமக்களிடம் வேட்பாளர் முகமது முபாரக் முகம் பதித்த மாஸ்க்குளை அணிந்து துண்டு பிரசுரங்கள் விநியோகித்து இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து முள்ளிப்பாடி, தாமரைப்பாடி, கல்லாத்துப்பட்டி பகுதிகளில் வீதி வீதியாக வீடு தோறும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வெற்றி வேட்பாளர் முகமது முபாரக் ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் எஸ்டிபியை தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி