சாலையில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரம்

55பார்த்தது
பழனி நகரில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடைகளில் ஓடிவந்த மழை நீர் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் புகுந்தது. இதையடுத்து நகராட்சி தூய்மை பணியாளர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கி பணியாற்றினர். சாக்கடை அடைப்புகளை சரி செய்து மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். துரிதமாக செயல்பட்ட நகராட்சி பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி