திண்டுக்கல் மாவட்டம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் விடுதிகளில் தங்குவதற்கு அதிக கட்டணங்கள் வசூலித்து வருகின்றனர். மேலும் விடுதிகளில் முறையான ஆவணங்கள் இல்லாமல் பக்தர்களை தங்க வைப்பதால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனையடுத்து நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் அடிவாரம் பகுதியில் உள்ள அனைத்து விடுதிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.