மாற்றுத் திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டி மனு

58பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, எத்திலோடு கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

இவர்கள் வாழ்வாதார மேம்பாட்டிற்காக மத்திய அரசு நிதி உதவியுடன் தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளாக 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தினர்.

இதனால், மாற்றுத் திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முந்திய ஆண்டு (2023-24) சில ஓடைகளில் ஒதுக்கப்பட்டது.

அதே போல் இந்த வருடம் 100 நாட்கள் வேலை திட்டத்தின் கீழ் ஓடைகளில் வேலைவாய்ப்பு வழங்கி மாற்றுத்திறனாளி வாழ்வாதாரத்துக்காக காக்க வேண்டும் என திங்கட்கிழமை மதியம் 1 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட குறை தீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி