திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு - முழு விபரம்

68பார்த்தது
தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், புதன்கிழமை (மே 22) தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது.

இது வடகிழக்கு திசையில் நகா்ந்து, மத்திய வங்கக்கடலில் 24- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால், செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்தது.

அந்த வகையில் 20. 05. 2024 காலை முதல் 21. 05. 2024 காலை வரை மழைப்பொழிவின் விபரம் திண்டுக்கல்லில் 5மி. மீ மழையும், கொடைக்கானல் ரோஸ் கார்டனில் 21மி. மீ மழையும், பழனியில் 44மி. மீ மழையும், சத்திரப்பட்டியில் 2மி. மீ மழையும், நத்தத்தில் 6மி. மீ மழையும், நிலக்கோட்டையில் 3மி. மீ மழையும், வேடசந்தூரில் 15. 40மி. மீ மழையும், புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் 14. 40மி. மீ மழையும், காமாட்சிபுரத்தில் 28. 50மி. மீ மழையும், கொடைக்கானல் ப்ரையண்ட் பார்க் பகுதியில் 20மி. மீ மழையும் ஆக மொத்தம் மாவட்டத்தில் 159. 30மி. மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி