செம்மொழிப் பூங்காவில் புலம்பெயர் உணவுத் திருவிழா

76பார்த்தது
செம்மொழிப் பூங்காவில் புலம்பெயர் உணவுத் திருவிழா
செம்மொழிப் பூங்காவில் புலம்பெயர் உணவுத் திருவிழா நடைபெற்றது. உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் புலம்பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவை திமுக எம்.பி., கனிமொழி தொடங்கி வைத்தார். இந்த உணவுத் திருவிழாவில் இலங்கை, பர்மாவைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட உணவுகள் இடம்பெற்றுள்ளன. இந்த விழா இன்று முதல் வருகிற 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் கலாநிதி வீராசாமி எம்.பி., உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி