ஓய்வு குறித்து தோனி யாரிடமும் கூறவில்லை

59பார்த்தது
ஓய்வு குறித்து தோனி யாரிடமும் கூறவில்லை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் 42 வயதாகும் தோனி, ஐபிஎல் தொடரிலிருந்து இப்போது ஓய்வு பெறுவார் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. அந்த வகையில் இந்த சீசன் முடிந்த பிறகு தோனி ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த சீசனில் தோனி பேட்டிங் செய்த விதத்தை பார்க்கும்போது, தோனியால் மற்றொரு சீசன் விளையாட முடியும் என்று நினைக்கிறோம். ஆனால் ஓய்வோ, விளையாடும் முடிவோ அவரை பொறுத்தது என சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி