காலாண்டு விடுமுறை ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

55பார்த்தது
தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது இதனை அடுத்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆட்சியில் நேற்று காலை முதல் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்கள் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும் இன்று செப்டம்பர் 30 காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும் பரிசினில் செல்லவும் ஆர்வம் காட்டி வந்தனர். குறிப்பாக ஐந்தருவி, சினி ஃபால்ஸ், முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் கலை கட்டி உள்ளது. பயணிகளின் வரத்து அதிகரிப்பால் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு நலன் கருதி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி