நாளை டாஸ்மாக் கடைகள் மூடல் - ஆட்சியர் உத்தரவு

60பார்த்தது
நாளை டாஸ்மாக் கடைகள் மூடல் - ஆட்சியர் உத்தரவு
தருமபுரி மாவட்டத்தில் நாளை 02. 10. 2024 (புதன் கிழமை) “காந்தி ஜெயந்தி தினம்” அன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் / முன்னாள் படை வீரர் மதுவிற்பனைக் கூடம் அனைத்தும் 01. 10. 2024 இரவு 10. 00 மணி முதல் 03. 10. 2024 காலை 12. 00 மணி வரையும் மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது.

மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி, இன்று (அக்டோபர் 01) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி