சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று (பிப்.,6) நடந்த இரட்டையர் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் - விஜய் சுந்தர் பிரசாந்த் கூட்டணியானது ஜான் லாக் (ஜிம்பாப்வே) - ரியோ நோக்குச்சி (ஜப்பான்) இணையுடைன் மோதியது. இந்த ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இதேபோல் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார்- சகெத் மைனெனி ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.