கடத்தூரில் பாமக திமுக மோதலால் பரபரப்பு

63பார்த்தது
காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த கோரி இன்று தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற உள்ளது. இதற்கு ஆதரவு கேட்டு நேற்று அக்டோபர் 03 இரவு 7. 30 மணியளவில் கடத்தூரில் பாமகவினர் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர். அதேபோல் மறுபக்கம் கடையை திறக்க கோரி திமுக சார்பில் துண்டு பிரசுரம் வழங்கினர். அப்போது பாமக மற்றும் திமுகவினர் இடையே கடுமையான வாக்குவாதம் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததை அடுத்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி