ஆதிமூல பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

78பார்த்தது
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி மூக்கனூர் பகுதியில் அமைந்துள்ள ஆதிமூல பெருமாள் சாமி திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு செப்டம்பர் 21 இன்று அதிகாலை முதல் சுவாமிக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வந்தது. ஆதிமூல பெருமாள் சாமிக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் பன்னீர் விபூதி தேன் பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதைத் தொடர்ந்து ஆதிமூலம் பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் தர்மபுரி உதவி ஆணையாளர். ராஜா. ஆய்வாளர் பெரமன். ‌உதவியாளர் எழிலரசன். மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி