காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த ஆட்சியர் மற்றும் எம்பி

67பார்த்தது
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அறிவித்து இன்று திருவள்ளூரில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார்
இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட பொம்மிடி அருகே உள்ள பி. பள்ளிப்பட்டி தூய மரியாள் துவக்கப் பள்ளியில் இன்று காலை உணவு வழங்கும் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி. பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி. எஸ். சரவணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய கவுன்சிலர் ஜான் பாபு , பி பள்ளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமலா தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து உணவை அருந்தி காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தனர்.
மேலும் தர்மபுரி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் 8 பள்ளிகளில் 901 பள்ளி குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி