வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

74பார்த்தது
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சி, வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பவுர்ணமி வள்ளல் அதியமான் அவர்களின் பிறந்த நாள் அரசு விழாவில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி. சாந்தி இஆப. , அவர்கள் வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு இன்று (23. 04. 2024) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை வளர்த்திட அரும்பாடுபட்ட தமிழறிஞர் கள். தமிழகத்தை உயர்த்திட தம் ஆயுளையே அர்ப்பணித் தார்கள். நாட்டின் விடுதலை க்கு பாடுபட்டு தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளை பெருமைப் படுத்தும் வகையில் தமிழகத்தில் பல்வேறு மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டு. அவற்றில் தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் பிறந்த நாள் விழா செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பவுர்ணமி தினமான
இன்றைய தினம் வள்ளல் அதியமான் அவர்களின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப் பட்டது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி. சாந்தி இஆப. , கலந்துக்கொண்டு வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் ஆகியோரின்
திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி