கதிர் அறுக்கும் இயந்திரத்துக்குள் சிக்கி உயிரிழந்த சிறுவன் (வீடியோ)

30189பார்த்தது
ஆக்ராவின் ஃபதேஹாபாத் காவல் நிலையப் பகுதியில் ஒரு பயங்கரமான விபத்து நடந்தது. வயலில் கதிரை அறுக்கும் போது 12 வயது சிறுவன் அந்த இயந்திரத்துக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இயந்திரத்துக்குள் சிறுவன் சிக்கி இறந்து கிடக்கும் காட்சிகள் பலரையும் கலங்கடித்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், சிறார்களை வேலைக்கு அனுப்பக் கூடாது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி