மாரடைப்பால் கல்லூரி பேராசிரியர் மரணம்

78பார்த்தது
மாரடைப்பால் கல்லூரி பேராசிரியர் மரணம்
கேரளாவின் கொச்சியில் கல்லூரி ஒன்றில் நேற்று (செப்., 11) ஓணம் கொண்டாட்டத்தின் போது கல்லூரி பேராசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடுபுழாவை சேர்ந்த ஜேம்ஸ் ஜார்ஜ் (38) என்பவர் தனியார் கல்லூரியில் வணிகவியல் துறையில் பணியாற்றி வந்தார். கல்லூரியில் ஓணம் பண்டிகையையொட்டி நடைபெற்ற கயிறு இழுத்தல் போட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.

தொடர்புடைய செய்தி