தர்மபுரி: எஸ் பி தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர் முகாம்

79பார்த்தது
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் அக்டோபர் 16 நேற்று புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் 31 காவல் நிலையங்களில் இருந்து 75 புகார் மனுதாரர்கள் வரவழைக்கப் பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.

மேலும் 25 மனுக்கள் புதிதாக பெறப்பட்டு மேல் விசாரணைக்காக அந்தந்த பகுதி காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மேலும் இதில் உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், உட்பட காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி