தொழில்நெறி விழிப்புணர்வு வாரம் அனுசரிப்பு ஆட்சியர் அறிவிப்பு

64பார்த்தது
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு பயிற்சித்துறை சார் பில் படித்த இளைஞர்களில் வேலை வாய்ப்புபெறும் திறனை அதிகரிக்கும் விதமாக, பல்வேறு திறன் பயிற்சிகள் அளிக்கப்படு கிறது. இந்த திறன் பயிற்சிக ளின் தேவை மற்றும் அவற் றின் முக்கியத்துவம் குறித்து இளைஞர்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்த நடவ டிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு வகையான படிப்புகள்
பணிவாய்ப்புகள் மற்றும் போட்டித்தேர்வுகள் குறித் தும், தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வருகிற 15-ந்தேதி வரை தொழில் நெறி விழிப்பு ணர்வு மற்றும் திறன் வாரம் அனுசரிக்கப் படுகிறது. இதன்படி இன்று பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிக ளுக்கு தொழில் நெறி வழி காட்டும் பயிற்சி அளிக்கப்ப டுகிறது. இணையதளம் மூலம் இன்று வெள்ளிக் கிழமைபள்ளிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பயிற்சி நடத்தப்படுகிறது. வரு கிற 15-ந்தேதி அரசு தொழிற்ப யிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவி களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் படித்த இளைஞர் கள், மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன் பெறலாம். இது தொடர்பாக www. tnskill. m. gov. in என்ற இணையதளம் மூலம் பயிற்சி பற்றிய விவரங் களை தெரிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பித்து பயனடையலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி