அரசு அலுவலர்களுக்கு பயிற்சி

66பார்த்தது
அரசு அலுவலர்களுக்கு பயிற்சி
அரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, கிராம உத வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை வருவாய் அலுவலர்களுக்கு பயிற்சி மற்றும் ஆய்வு கூட்டம், அரூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

இதில் வரும், 4ல் தர்மபுரி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையின் போது, வருவாய்த்துறை அலுவலர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு வர வேண்டும். ஓட்டு எண்ணிக்கை நிறைவு பெற்றதும், அனைத்து ஓட்டுப்பதிவு இயந்திரங் களும் சீல் வைக்கப்பட்டு, பெட்டிகளில் அடுக் கப்பட வேண்டும். பின், போலீஸ் பாதுகாப்புடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கிற்கு எடுத்துச் செல் லப்படும் வரை பணியில் இருக்க வேண்டும் என் பன போன்ற அறிவுரைகளை, அரூர் ஆர். டி. ஓ. , மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வில்சன் ராஜசேகர் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி