வாரசந்தையில் 20 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

56பார்த்தது
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக வார சந்தை நடைபெற்று வருகிறத நேற்று காலை கூடிய வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்குவதற்காக வந்திருந்தனர். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் ஆடுகள் விற்பனை மந்தமாக நடைபெற்றது.

சிறிய அளவிலான ஆடுகள் 3, 000 ரூபாய்க்கு துவங்கி பெரிய அளவிலான ஆடுகள் 22 , 000 ரூபாய் வரையில் விற்பனையானது மேலும் நேற்று அக்டோபர் 01, 20 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி