தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பைநல்லூரில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. நேற்று பிப்ரவரி 21, நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்தனர். நேற்று நடந்த சந்தையில் ஆடுகளின் தரம் மற்றும் ரகத்தின் அடிப்படையில் ஆடுகள் 5,300 முதல் 9,700 வரை விற்பனையானது. மேலும் ஒட்டுமொத்தமாக 29 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.