ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி: நீதிமன்றம் தீர்ப்பு

81பார்த்தது
ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி: நீதிமன்றம் தீர்ப்பு
கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூல் செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்., 17) தீர்ப்பளித்துள்ளது. கொரோனா காலத்தில் சாலை வரி விதிக்கக்கூடாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வைத்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிராகரித்ததால், அதை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தற்போது, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.