போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் கைது

70பார்த்தது
கம்பைநல்லூர் அருகே உள்ள ஜக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். தி. மு. க. கிளை செயலாளரான இவர் கம்பைநல்லூர் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதுதொ டர்பாகவிசாரணை நடத்துவதற்காக கம்பைநல்லூர்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஜக்குப்பட்டிக்கு சென்றார். அப்போது ஜக்குப்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் மாரி முத்து (வயது 33), மாதையன் மகன் சின்னசாமி (35) ஆகிய 2 பேரும் சப்- இன்ஸ்பெக்டர் யோகபிரகாசை தகாத வார்த் தைகளால் திட்டி மரக்கட்டையால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கம்பைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்து மற்றும் சின்னசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

தொடர்புடைய செய்தி