சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, மகன், மகள், 2 மாத பேரக்குழந்தை உள்பட 5 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடன் பிரச்சனை காரணமாக ஆசிரியர் லிங்கம் என்பவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.