கடலூர்: ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு

561பார்த்தது
கடலூர், செம்மண்டலம் சிக்னல் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சாந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று சித்திரை மாதம் சனிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதனையடுத்து பக்தர்கள் நெய் விளக்கேற்றி ஆஞ்சநேயர் சுவாமியை வழிபட்டனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி