திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெண்ணாடம், திட்டக்குடி தொலைக்கல்வி மையம் சார்பில் கடலூர், பெண்ணாடம் மையத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு மைய ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பாவேந்தர் பாரதிதாசன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பாரதிதாசன் எழுதிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.