தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் நேற்று நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலிருப்பு ஊராட்சியில் இன்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் பாமக மாவட்ட செயலாளர் ஜெகன் உள்ளார்.
இதில் மேலிருப்பு கிராமத்தில் உள்ள பொதுமக்கள் வானவேடிக்கை மூலமாக வரவேற்பு அளித்தனர். இதனை அப்பகுதி மக்கள் வெகுவாக ரசித்தனர்.