ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேல் 'லேவண்டர்' என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவில் இருப்பவர்களில் பயங்கரவாதிகளாக சந்தேகிக்கும் நபர்களை அடையாளம் கண்டு, இந்த செயற்கை நுண்ணறிவு ராணுவத்திற்கு தெரியப்படுத்தும். அதன் மூலம். இஸ்ரேல் ராணுவம் துல்லியமாக தாக்குதல் நடத்தும். இப்படி போரில் ஏஐ தொழில்நுட்பத்தை இஸ்ரேல் பயன்படுத்துவதாக வெளியான தகவல் உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.