நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொஞ்சிக்குப்பம் ஐயனார் கோவில் கும்பாபிஷேக விழாவில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்.எல்.ஏ. இராசேந்திரன் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். உடன் பண்ருட்டி ஒன்றிய முன்னாள் பெரும் தலைவர் சபா. பாலமுருகன், வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ் குமார் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.