கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நாளை (ஏப்ரல். 06) பங்குனி மாத ஜோதி தரிசனம் இரவு 7.45 மணி முதல் 8.45 மணி வரை நடைபெற உள்ளது. அதற்காக ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் செய்து வருகின்றனர்.