இலங்கைக்கு சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுடன் கொழும்பில் விரிவானதும் பயனுள்ளதுமான பேச்சுகளில் ஈடுபட்டிருந்தேன். இன்று நடைபெற்ற பேச்சுகளின்போது பாதுகாப்பு, வர்த்தகம், விவசாயம், வீட்டுவசதிகள், கலாசாரம் மற்றும் ஏனைய துறைகளில் காணப்படும் உறவுகளுக்கு மேலும் உத்வேகமளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது" என்றார்.