குறிஞ்சிப்பாடி அருகே மர்மமான முறையில் தள்ளு வண்டி கடையில் தீ

84பார்த்தது
குறிஞ்சிப்பாடி அருகே மர்மமான முறையில் தள்ளு வண்டி கடையில் தீ
குறிஞ்சிப்பாடி அருணாச்சலம் பள்ளி பஸ் ஸ்டாப்பின் அருகில் நேற்று இரவு 11: 30 மணி அளவில் சாலையில் நின்று கொண்டிருந்த தள்ளு வண்டி கடை திடீர் என தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தபோது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் மாவட்ட எஸ்பி தனது வாகனத்தை நிறுத்தி குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினர் உதவியுடன் எரிந்து கொண்டிருந்த தள்ளு வண்டிக் கடையை தீயை அணைத்து மேலும் அக்கம் பக்கம் தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் கடந்த ஒரு மாத காலமாக கல்குணத்தில் மர்மமான முறையில் திடீர் திடீரென 5 ந்து கூரை வீடுகளும் கால்நடைக்கு வைத்திருந்த 2- வைக்கோல் போர்களும் நள்ளிரவு நேரங்களில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் உறங்காமல் அவரவர்களது வீட்டை பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது அதனை அடுத்து தற்போது குறிஞ்சிப்பாடியில் ரோட்டுக்கடை தள்ளுவண்டி இரவு தீப்பிடித்து எரிந்து சாம்பலான சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது. மர்மமான முறையில் கூரை வீடுகளையும் தள்ளு வண்டி கடைகளையும் தீ வைத்து கொளுத்தும் அந்த மர்ம நபர் யார் மர்ம நபரா? அல்லது மாயாஜாலமா? மர்ம நபரின் அடுத்த கைவரிசை என்ன? மேலும் இச்சம்பம் நடைபெறாமல் இருக்க விரைவில் காவல்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி