குள்ளஞ்சாவடி அடுத்த தெற்கு வழுதலம்பட்டு பகுதியை சேர்ந்த மரியசூசை மகன் ஏசுதாஸ் இரண்டு மகள்கள் மற்றும் மகன் ஆகியோரை பள்ளியில் விடுவதற்காக பைக்கில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது கருமாட்சி பாளையம் பகுதியில் இருசக்கர வாகனம் சாலையை கடந்த போது அந்த வழியாக வந்த டவேரா கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் 4 பேர் காயமடைந்தனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.