பிரபல தெலுங்கு சீரியலான 'சக்ரவாகம்'-த்தில் நடித்த சீரியல் பிரபலங்களான, இந்திர நீல் மற்றும் மோகனாவின் காதல் கதை மிகவும் சுவாரஸ்யமானது. அதாவது இந்த சீரியலில் தனது கணவர் இந்திரா நீலுக்கு மாமியாராக மோகனா நடித்திருந்தார். முதலில் காதலித்துவந்த இவர்களிருவரும் இந்த சீரியல் மறுஒளிபரப்பு செய்யப்பட்டபோது திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணம் செய்துகொண்ட சமயத்தில் பலரும் மாமியாரை திருமணம் செய்துகொண்ட மருமகன் என கிண்டல் செய்துவந்தனர். சமீபத்தில் இவர்கள் தங்களது 20 வருட திருமண நாளை கொண்டாடினர்.