கடலூர்: பஸ்சுக்கு அடியில் சிக்கி மூளை சிதறி பலி

11362பார்த்தது
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் பேருந்து பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் குண்டு உப்பலவாடி பகுதியை சேர்ந்தவர் திருஞானம் (65). இவர் அதே பகுதியில் மாவு அரவை மில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று திருஞானம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று விட்டு மீண்டும் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடை எதிரில் உள்ள சென்டர் மீடியமில் எதிர்பாராத விதமாக மோதி திடீரென இடதுபுறம் விழுந்துள்ளார்.

அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற தனியார் பேருந்து பின் சக்கரத்தில் சிக்கி திருஞானம் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனுடைய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த புதுநகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருஞானம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து புதுநகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

தொடர்புடைய செய்தி