திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டைச் சேர்ந்த சபீர் தனியார் நிறுவன ஊழியர் இவர் நேற்று முன்தினம் இரவு புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம் வளைவில் சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புதுச்சத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.